Friday, April 26, 2024
Home » கிண்ணியா மக்களுக்கு காணி உரித்தாவணங்கள் வழங்கிவைப்பு

கிண்ணியா மக்களுக்கு காணி உரித்தாவணங்கள் வழங்கிவைப்பு

by damith
November 14, 2023 5:55 am 0 comment

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவிலுள்ள மக்களுக்கு காணி உறுதிகளைப் பெறுவதற்கான உரித்தாவணங்கள் வழங்கப்பட்டன. இம்மக்கள் ஏற்கனவே குடியிருந்த காணிகளுக்கு உறுதிகளைப் பெறும் வகையில்,இந்த உரித்தாவணங்கள் வழங்கப்பட்டன.இம்மக்கள், ஏற்கனவே பல வருடங்களாக குடியிருந்த காணிகளுக்கு உறுதிகள் வழங்கும் நடவடிக்கைகளின் முன்னோடி ஏற்பாடாக இந்த உரித்தாவணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு கடந்த (10) வெள்ளிக் கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதில், பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும், செக். நாட்டின் இலங்கைக்கான தூதுவர். மேலதிக அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர் உட்பட பல உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். கனி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. காணி உரித்தாவணம் இல்லாத நிலையில், கிண்ணியா பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, காணிகளுக்கு உரித்தாவணங்கள் வழங்கப்பட்டன. முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் உரித்தாவணங்களை பெற்றுக்கொண்டனர்.

(கிண்ணியா தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT