Monday, May 6, 2024
Home » மட்டக்களப்பில் இலவச அரிசி விநியோக நிகழ்வு

மட்டக்களப்பில் இலவச அரிசி விநியோக நிகழ்வு

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பங்கேற்பு

by Gayan Abeykoon
April 24, 2024 9:24 am 0 comment

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் வர்த்தக  வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்  கலந்து சிறப்பித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில்  குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி பொதிகள்  கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  (21)  வழங்கப்பட்டது.

600 மில்லியன் நிதி ஒதுக்கீடு மூலம் குறைந்த வருமானம் பெறும் 1,56000 குடும்பங்களுக்கு இரு தடவை அரிசிப் போதிகள் வழங்கப்படவுள்ளன.

புது வருட காலப்பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக அரிசி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷிஸ்ரீகாந், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பிரதி திட்டமிடம் பணிப்பாளர், வர்த்தக  வாணிப இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்  ரோஷ்மன் என பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT