Friday, May 3, 2024
Home » வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பாற்குடபவனி

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பாற்குடபவனி

by gayan
April 20, 2024 8:00 am 0 comment

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் இரண்டாவது வருடாந்த அலங்கார உற்சவத்தின் பாற்குட பவனி நேற்று (19) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்துக்கு மேற்குப் புறமாக உள்ள சிவன் ஆலயத்தில் விசேட கிரியைகள், பூஜை இடம்பெற்று பாற்குடபவனி ஆரம்பமானது.

முன்னே ஆலய பரிபாலன சபை தலைவர் கி. ஜெயசிறில் பிரதான கும்பம் தாங்க, ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா பிரதான மடை தாங்க, ஆலயகுரு சிவஸ்ரீ ச. கோவர்த்தனசர்மா வழிகாட்டலில் பாற்குடபவனி சிறப்பாக நடைபெற்றது.

இதேவேளை உற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலயகுரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா பங்கேற்புடன் வருஷாபிஷேக கிரியைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல் அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம் பெற்று எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவடைய இருக்கின்றது. இந்த பத்து நாள் அலங்கார உற்சவ திருவிழாக்காலங்களில் காலை 10 மணிக்கு கும்ப பூஜையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவ பிரதான பூஜை, அம்பாளின் வீதியுலா இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது .

பத்து தினங்களுக்கான திருவிழாக்களையும் அன்னதானத்தையும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பிரதேசங்கள் பொறுப்பேற்று நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT