Home » மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர் நாடு திரும்பினர்

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர் நாடு திரும்பினர்

by Gayan Abeykoon
April 19, 2024 9:57 am 0 comment

மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட  இலங்கையர்கள்  எட்டுப் பேரும் நாட்டை வந்தடைந்தனர்.

தாய்லாந்திலிருந்து நேற்று (18) காலை கட்டுநாயக்க சர்வதேச  விமான நிலையத்தை வந்தடைந்த UL 403 என்ற விமானத்தில்  இவர்கள் நாடு

திரும்பியதாக  விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.இவர்களில்,

06 ஆண்களும் இரண்டு பெண்களும்  உள்ளடங்குகின்றனர்.கடந்த மார்ச் (04) மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப்  பகுதியில், பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர்களை  விடுவிப்பதற்காக மியன்மார் பாதுகாப்பு படையினர் செயற்பட்டனர்.

இலங்கைக்கு அனுப்பும் நோக்கில் மியாவாடி மத்திய  பொலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பு நிலைமை  தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த (11) மியான்மரில் உள்ள  இலங்கை தூதரகம் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அவர்களை தாய்லாந்தில் உள்ள  இலங்கை தூதரகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT