Thursday, May 2, 2024
Home » யாழ். மணிக்கூட்டு கோபுரம் முதல் பண்ணைவரை தூய சுற்றுலா வலயம்

யாழ். மணிக்கூட்டு கோபுரம் முதல் பண்ணைவரை தூய சுற்றுலா வலயம்

by Gayan Abeykoon
April 19, 2024 9:53 am 0 comment

யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் தொடக்கம் பண்ணைவரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலயமாக்கும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் அண்மையில் நடைபெற்றது.

யாழ். மாநகரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஏற்கெனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவற்றை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாநகர சபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர், கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன், தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT