2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியான தினகரன் பத்திரிகையின் முதல் பக்கத்தில், ‘ரஷ்யாவிலிருந்து இரண்டு தரமற்ற புற்றுநோய் மருந்துகள் இறக்குமதி’ என்ற தலைப்பிலும் “ரூ. 3.8 பில் இழப்பு – நிதி நட்டத்தை விடவும் மரணங்கள் மதிப்பிட முடியாதவை” என்ற உப தலைப்பிலும் செய்தி பிரசுரிக்கப்பட்டமைக்காக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் DMR 1986 /2019 ஆம் இலக்க வழக்கின் முறைப்பாட்டுக்காரரான பார்மெஸ் (தனியார்) லிமிடட் நிறுவனத்திற்கு எந்த வகையிலாவது பாதிப்பு அல்லது முறைப்பாட்டுக்காரரின் நற்பெயருக்கு களங்கம் அல்லது, அவமதிப்பு ஏற்பட்டிருக்குமாயின், அதுதொடர்பில் ‘தினகரன்’ பத்திரிகையும், தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக செயல்பட்ட கே. குணராசா அவர்களும், பத்திரிகையை வெளியிட்ட த அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர் ஒப் சிலோன் லிமிடட் நிறுவனமும் முறைப்பாட்டு நிறுவனத்திடம் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.