78
தற்போது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் ஹக்கல பூங்காவுக்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். இவ்வாறு ஹக்கல பூங்காவுக்கு பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வருமானம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக, ஹக்கல பூந்தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாடசாலை மாணவர்களும் மழை, வெய்யில், பனிப்பொழிவு எதனையும் பொருட்படுத்தாது இவ்வாறு வருகை தருகின்றனர்.
பாடசாலை விடுமுறை மற்றும் சித்திரைப் புத்தாண்டு விடுமுறை காலத்திலும் அதிகளவான மக்கள் ஹக்கல பூங்காவுக்கு வருகை தந்ததுடன், அதன் அழகையும் கண்டு களித்தனர்.
ஊவா சுழற்சி நிருபர்