Thursday, May 2, 2024
Home » .ல.சு.க: மைத்திரியின் பதவி த​ைடயுத்தரவு மே 09 வரை நீடிப்பு

.ல.சு.க: மைத்திரியின் பதவி த​ைடயுத்தரவு மே 09 வரை நீடிப்பு

by Gayan Abeykoon
April 19, 2024 10:44 am 0 comment

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில்,   ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் மே மாதம் (09) வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட மனு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்படி முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.  கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, மைத்திரிபால சிறிசேனவிற்கான தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டது.

அதேவேளை, மேற்படி விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மைத்திரிபால சிறிசேன கட்சியையும் அழித்து நாட்டையும் அளித்துள்ளார். அவரால் இழைக்கப்பட்ட தவறுகளை  தற்போது  நிவர்த்தி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளக ரீதியில் பல்வேறு நெருக்கடிகள் நிலவும் நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூடிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT