Thursday, May 2, 2024
Home » ஈஸ்டர் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு

ஈஸ்டர் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு

by Gayan Abeykoon
April 19, 2024 10:58 am 0 comment

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில்  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதற்கிணங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். அன்றைய தினம் கொச்சிக்கடை புனித அந்தோனியார்  ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் இடம் பெறவுள்ளன. மேற்படி அஞ்சலி நிகழ்வையொட்டி  20 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு   கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து அஞ்சலி ஊர்வலம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஊர்வலம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தை சென்றடைந்து இரவு முழுவதும் செப வழிபாடுகள் இடம் பெறுவதுடன்  காலை 8.30 மணியளவில் அங்கு விசேட வழிபாடுகள் இடம் பெறவுள்ளன.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT