60
மின்சாரத் துறை மறுசீரமைப்பு தொடர்பான திருத்தச் சட்டமூலம் நேற்று வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் இதை, சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இச்சட்டமூலத்தின் உத்தியோகபூர்வ தன்மை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கான அவகாசத்தை வழங்கும் வகையில், சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் தினத்திலிருந்து இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)