485
பாரிய வெட்டுக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் ஊரகஸ்மங்கந்திய மீகஸ்பிட்டிய பகுதி வியாபார நிலையம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஸ்டிக்கர் தயாரிப்பு நிலையம் ஒன்றினுள் இருந்து இன்று (11) இச்சடலம் மீட்கப்பட்டதாக ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு இறந்து போனவர் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளரது 41 வயதான மனைவியாவார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் தனது கணவருடன் இங்கு வசித்து வந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்