திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலங்கேணி அருள்மிகு விநாயகர் கோயில் பூங்காவனத் திருவிழாவையொட்டி கடந்த சனிக்கிழமை (24) நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
இக்கோயில் திருவிழாவையொட்டி கிண்ணியாவிலுள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலை மாணவர்கள் மத்தியில் பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம், நடனம் முதலிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கே பரிசில்கள் வழங்கப்பட்டன.
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். அத்துடன் திருவிழாவை சிறப்பான முறையில் நடத்திய சைவக் குருமாரையும் அவர் கௌரவித்தார்.
அன்புவழிபுரம் தினகரன் நிருபர்