Sunday, May 5, 2024
Home » தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு மாநாடு

தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு மாநாடு

நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு

by mahesh
February 28, 2024 12:30 am 0 comment

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாளை வியாழக்கிழமை (29) நடைபெறவுள்ள 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு, அப்பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (26) நடைபெற்றது.

‘Digital Transformation for a Sustainable Future’ எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பிரித்தானியாவினுடைய Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச்கோம் பிரதான பேச்சாளராக கலந்துகொள்ளவுள்ளார்.

இம்மாநாட்டில் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளன. இம்மாநாட்டுக்கான இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்களிடம் நுழைவுச்சீட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர், பேராசிரியர்கள் திணைக்களத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பிரதி நிதியாளர், தனியார் நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திராய்க்கேணி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT