Sunday, April 28, 2024
Home » தாய்வான் பாதுகாப்பை மேம்படுத்த கோரிக்கை

தாய்வான் பாதுகாப்பை மேம்படுத்த கோரிக்கை

by sachintha
February 20, 2024 7:26 am 0 comment

“எமது பாதுகாப்பு திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கிடைக்கப்பெறும் எந்த உதவியையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்று தாய்வானின் வெளிவிவகாரத்திற்கான உதவி அமைச்சர் அலெக்ஸான்டர் யுய் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்துள்ள விசேட பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், சீனாவுடன் ஏதேனும் மோதல் நிலை ஏற்பட்டால் அதற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருப்பதற்கு அமெரிக்க இராணுவம் பங்குதாரர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு தாய்வானின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் அமெரிக்கா கூடுதல் நிதியுதவி வழங்குமென நம்புவதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT