Monday, April 29, 2024
Home » மதவாச்சி அல் ரசீத் பின் அப்துல்லாஹ் அரபுக்கல்லூரியில் இரு பெரும் விழா

மதவாச்சி அல் ரசீத் பின் அப்துல்லாஹ் அரபுக்கல்லூரியில் இரு பெரும் விழா

by Gayan Abeykoon
February 15, 2024 5:33 am 0 comment

மதவாச்சி அல் ரசீத் பின்  அப்துல்லாஹ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பும் புதிய கட்டட திறப்பு விழாவும் அண்மையில்   மதவாச்சி ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றன.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்து கொண்டதோடு புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பல முக்கிய உலமாக்கள் கலந்து கொண்டதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவர்கள், தொழிலதிபர்கள், பெற்றோர் மற்றும் ஊர் ஜமாஅத்தினர்  என பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

இக் கல்லூரியில் இருந்து 10 மாணவர்கள் ஹாபிழ் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, பொன்னாடை போர்த்தி  நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT