Home » சம்பியன் கிண்ணம் வென்றன எக்ஸ்போலங்கா, செலிங்கோ
மெர்கன்டைல் நொக் அவுட்

சம்பியன் கிண்ணம் வென்றன எக்ஸ்போலங்கா, செலிங்கோ

by sachintha
February 9, 2024 11:14 am 0 comment

 

மெர்கன்டைல் கால்பந்து சங்கத்தினால் நடத்தப்பட்ட நொக் அவுட் கால்பந்து தொடரின் முதலாம் பிரிவில் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பீஎல்சி அணியும் இரண்டாம் பிரிவில் செலிங்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடட் அணியும் சம்பியன் கிண்ணங்களை வென்றன.

கொழும்பு, சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற இறுதிப் போட்டியில் எக்ஸ்போலங்கா அணி, எச்.என்.பி. அசூரன்ஸ் பீஎல்சி அணியை பெனால்டி சூட் அவுட் முறையில் 4–3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. போட்டியின் முழுநேர முடிவின்போது இரு அணிகளும் தலா 2 கோல்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டாம் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அணியை எதிர்கொண்ட செலிங்கோ அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்தது. இதில் முதலாம் பிரிவின் சிறந்த வீரராக எச்.என்.பி. அணியின் மரியதாஸ் நிதர்ஷன் தெரிவானதோடு இரண்டாம் பிரிவில் செலிங்கோ அணியின் ஹேஷான் டி சில்வா தெரிவானார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT