Sunday, May 12, 2024
Home » தென் சீனக் கடலில் சீனாவின் ‘ஆத்திரமூட்டும்’ நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் மீண்டும் கண்டனம்

தென் சீனக் கடலில் சீனாவின் ‘ஆத்திரமூட்டும்’ நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் மீண்டும் கண்டனம்

by Rizwan Segu Mohideen
January 26, 2024 5:48 pm 0 comment

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு எதிரான அண்மைய “ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு” சீனாவின் கடலோரக் காவல்படையை பிலிப்பைன்ஸ் மீண்டும் கண்டித்துள்ளது, சர்ச்சைக்குரிய நீர்வழிப் பாதையில் பதட்டங்களை தணிப்பதற்கு மேலதிக நடவடிக்கைகளை எடுக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு சில நாட்களே கடந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வார இறுதியில் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை (PCG) வெளிப்படுத்திய ஒரு சம்பவம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பேச்சாளர் ஜொனாதன் மலாயா கருத்து வெளியிட்டிருந்ததோடு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி சர்ச்சைக்குரிய ஸ்காபரோ ஷோலுக்கு அருகில் மீனவர்கள் பிடித்த பொருட்களை சீன கடலோர காவல்படையினர் (CCG) கட்டாயப்படுத்தி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

2024 இல், நிலைமை மிகவும் அமைதியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் சீன கடலோர காவல் படையினரால் எங்கள் மீனவர்கள் விரட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டதைக் காட்டும் இந்த அண்மைய சம்பவம் ஆபத்தானது, மேலும் சீன கடலோர காவல் படையின் இந்த ஆத்திரமூட்டும் செயலை நாங்கள் கண்டிக்கிறோம் என்று பிலிப்பைன்ஸ் கனேடிய விசாரணையாளர் கூறினார்,

ஒப்பீட்டளவில் இது சிறிய சம்பவமாக இருந்தாலும் , இந்த சம்பவம் தென் சீனக் கடலில் ஒரு வருடத்திற்குப் பிறகு அதிகரித்து வரும் பதற்றத்திற்குப் பிறகு நடந்திருக்கிறது, 2012 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸை முற்றுகையிட்டதில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கார்பரோ ஷோல், பதட்டங்களின் மையமாக உள்ளது .

2023 ஆம் ஆண்டில் இரண்டாவது தோமஸ் ஷோலின் அருகாமையிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இது அக்டோபரில் பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பலுடன் சீனக் கப்பல்கள் மோதியது உட்பட பல மோதல்களில் நடந்துள்ளது. பிலிப்பைன்ஸ் விநியோகக் கப்பல்களை விரட்டுவதற்கு சீனக் கப்பல்கள் அதிக ஆற்றல் கொண்ட நீர் பீரங்கிகளையும் இராணுவ தர லேசரையும் பயன்படுத்தியுள்ளன.

இந்த அதிகரித்து வரும் மோதல் பீஜிங்கிற்கும் மணிலாவிற்கும் இடையிலான உறவுகளை குறைந்தபட்சம் ஒரு தசாப்தத்தில் மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் தற்போதைய பங்காளிகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே ஒரு ஒருங்கிணைப்பைத் தூண்டியுள்ளது.

பிலிப்பைன்ஸும் கனடாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பின்னர் இவ்வாறான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன .போர் பயிற்சிகள் மற்றும் பயிற்சிகளுக்காக பிலிப்பைன்ஸுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் செயற்படுகின்றன. தென் சீனக் கடலில் சீனா தனது உறுதிப்பாட்டை அதிகரித்துள்ள நிலையில், கனடா பிலிப்பைன்ஸுக்கு தனது ஆதரவை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. குறிப்பாக, சீனாவின் தென் சீனக் கடல் உரிமைகோரல்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையும் இல்லை என்று ஹேக்கில் உள்ள நடுவர் மன்றத்தின் 2016 தீர்ப்புக்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

அடுத்த வாரம் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் வருகையின் போது, வியட்நாமுடன் கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பினரும் அந்தந்த கடலோரக் காவல்படையினரிடையே கடல்சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,

வளர்ந்து வரும் சீன-பிலிப்பைன்ஸ் பதட்டங்கள் மற்றும் அவை ஒரு கவனக்குறைவான சூடான மோதலுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம், கடந்த வாரம் சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர் நோங் ரோங் மற்றும் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறையின் (DFA) துணைச் செயலர் தெரேசா லாசாரோ ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு அடிகோலியது. (த டிப்லொமெட்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT