Sunday, May 5, 2024
Home » புதையல் தோண்டிய இருவர் கைது

புதையல் தோண்டிய இருவர் கைது

by Gayan Abeykoon
January 25, 2024 9:23 am 0 comment

கிரிபாவ நீராவிய வனப்பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை கிரிபாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 23 ஆம் திகதி நேற்று கிரிபாவ பொலிஸ் பிரிவின் நீராவிய வனப்பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்டிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் கிரிபாவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 28,33 வயதுடைய நிக்கவெவ மற்றும் பஹள கிரிபாவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(அநுராதபுரம் தினகரன் நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT