புதிதாக கட்டப்பட்ட 3 மாடி கொண்ட வீடொன்று, இடிந்து வீழ்ந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையிலேயே வீட்டு உரிமையாளர்கள் முன்பாக இவ்வீடு இடிந்து வீழ்ந்துள்ளது.
இப்பரிதாபகரமான சம்பவம் இந்தியாவின், தமிழ் நாட்டில் உள்ள புதுச்சேரியில் இடம்பெற்றுள்ளது
பல நாட்களாக கட்டப்பட்டு, புதுமனை நுழைவதற்கு முன்னர் தனது வீடு கண்ணெதிரே இடிந்ததைக் கண்டு உரிமையாளர் மயக்கம் போட்டு வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுச்சேரியில் நகர வாய்க்காலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வாய்க்காலில் மண் அகழும் பகுதியில் ஜேசிபி இயந்திரம் ஈடுபட்டு வந்துள்ளது. இதனால் வாய்க்கால் ஓரமாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இவ்வீடு திடீரென சரிந்து வீழ்ந்து தரைமட்டடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெய்வாதீனமாக இச்சம்பவத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.