வென்னப்புவ அல்பட் எப். பீரிஸ் அரங்கில் நேற்று முன்தினம் (21) முடிவுற்ற டயலொக் தேசிய வலைப்பந்து தொடரில் தொடர்ந்து ஆறாவது முறையாகவும் ஹட்டன் நெஷனல் வங்கி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
இதன் இறுதிப் போட்டியில் ஹட்டன் நெஷனல் வங்கி அணி 40–39 புள்ளிகளால் விமானப்படை அணியை தோற்கடித்தது. இதன் இரண்டாவது சுற்றில் மாத்திரம் முன்னிலை பெற்றே ஹட்டன் நெஷனல் வங்கி அணி சம்பியன் கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 26 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் துறைமுக அதிகாரசபை அணியை 61–49 புள்ளிகளால் வீழ்த்திய கடற்படை அணி மூன்றாம் இடத்தை வென்றது.
இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் பல வீராங்கனைகளை உள்ளடக்கிய ஹட்டன் நெஷனல் வங்கி அணி அரையிறுதிப் போட்டியில் துறைமுக அதிகாரசபை அணியை வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.