பேருவளை சீனன்கோட்டை மத்ரஸதுல் ஸலாஹ் அரபுக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிகள் கல்லூரி வளாகத்தில் மூன்று தினங்களாக வெகுவிமர்சையாக நடைபெற்றன. இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இவ்வருட கற்கை நெறிக்காக உள்வாங்கப்பட்டுள்ள புதிய மாணவர்களும் இப்போட்டிகளில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். இறுதிநாள் நிகழ்வான நேற்று (18) நிகழ்வில் அதிதிகளாக மத்ரஸா நிர்வாக சபை உறுப்பினர்களான ஹிகாம் ஹாஜி, நௌபர் ஹாஜி உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், அல்ஹுமைஸரா தேசிய பாடசாலை அதிபர் எம். இப்றாஹீம் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன. இப்போட்டிகளினூடாக மாணவர்களின் திறமையை வெளிக்காட்டுவதும் மாணவர்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவப்பண்பையும் உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமென போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.