332
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறப்பு துரித ரயில் ரதல்ல மற்றும் கிறேட்வெஸ்டன் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் (15) பிற்பகல் மணியளவில் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த சிறப்பு துரித ரயில் தடம் புரண்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
இதனால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பல மணி நேரம் தாமதமடைந்தன.
அத்தோடு ரயிலில் பயணம் செய்த உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் உட்பட ஏனைய பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகினர். இந்த பாதையை சீர் செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
தலவாக்கலை குறூப் நிருபர்