Monday, May 6, 2024
Home » தேசிய லொத்தர் சபை உறுப்பினர்களின் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி

தேசிய லொத்தர் சபை உறுப்பினர்களின் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி

by sachintha
January 12, 2024 12:01 pm 0 comment

சிய லொத்தர் சபை உறுப்பினர்களுக்கிடையில் வருடாந்தம் நடத்தப்படும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 06.01.2024 அன்று கொழும்பு 05, ஷாலிகா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இம்முறை நிதிப்பிரிவைச் சேர்ந்த அணி 70,000.00 ரூபா பணப்பரிசையும் சம்பியன் கிண்ணத்தையும் வென்றது.

இரண்டாம் இடத்தை விற்பனைப் பிரிவு அணி பெற்றதோடு, அந்த அணிக்கு 50,000.00 ரூபா ரொக்கப் பரிசுடன் வெற்றிக்கோப்பையும் கிடைத்தது. இந்தப் போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக நிதிப்பிரிவைச் சேர்ந்த தனுஷ்க மதுரங்க தெரிவானார். சந்தைப்படுத்தல் பிரிவின் லலித் குமார சிறந்த துடுப்பாட்டக்காராகவும் , நிதிப்பிரிவைச் சேர்ந்த அசங்க விஜேவர்தன இந்தப் போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்கள்.

பெண்களுக்கான போட்டியில் சந்திரா ஹேரத் தலைமையிலான அணி சம்பியனாகவும், தனுஜா சம்மானி தலைமையிலான அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன. தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமிர சி.யாப்பா அபேவர்தன, பணிப்பாளர் கலாநிதி கித்சிறி மஞ்சநாயக்க, பணிப்பாளர் சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன உள்ளிட்ட கௌரவ அதிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT