Saturday, May 11, 2024
Home » ஒலுவில் களியோடை ஆறு பெருக்கெடுப்பு; முதற்தடவையாக பிரதான வீதியில் நீர் பரவல்

ஒலுவில் களியோடை ஆறு பெருக்கெடுப்பு; முதற்தடவையாக பிரதான வீதியில் நீர் பரவல்

by Prashahini
January 11, 2024 11:13 am 0 comment

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையில் அம்பாறை மாவட்டம் ஒலுவில் களியோடை ஆறு பெருக்கெடுத்ததினால் வரலாற்றில் முதற்தடவையாக அதனை அண்டிய நிந்தவூர் பிரதான வீதியில் நீர் பரவியுள்ளதுடன், வயல் நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளது.

நேற்று (10) மாலை அம்பாறை இங்கினியாகல சமுத்திரத்தின் நீர்மட்டம் 110.80 அடியை தாண்டியுள்ளதனால், முதற்தடவையாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பிரதான வீதியினூடாக மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பயணம் செய்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்பதுடன், இந்த ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இரவு வேளைகளில் இந்த வீதியினூடாக பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT