இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 28 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரயில் ,சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த ரயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி காலை 6:03 மணிக்கு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மேற்கு ஜாவா பொலிஸ் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் டோம்போ தெரிவித்துள்ளார்.
பயணிகள் ரயிலில் 106 பயணிகளும், துரங்காவில் 54 பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.