அசாம் மாநிலம் கொலாகாட் மாவட்டத்தில் பஸ்ஸொன்றும் ,லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்தானது இன்று (03) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
அசாம் மாநிலம் அதுஹெல்யா நகரில் இருந்து பலிஜான் நகருக்கு 45 பேர் சுற்றுலா சென்றபோது, பலிஜான் அருகே மார்கரிடா பகுதியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.