இந்து சமுத்திரத்தில் இன்று (30) மு.ப. 10.49 மணியளவில் 6.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்துனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் (2.50N, 92.84E) கடலிலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் இலங்கைக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
எனவே இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது, உரிய உத்தியோகபூர்வ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வெளியிடப்படும் அறிவிப்பாகும் என பொதுமக்களுக்கு அறியத்தருவதாக, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Earthquake_No threat_30_12_2023_11_29_20_AM