191
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் கலந்து கொண்டார். கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஆர்.வசந்தராசா உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பாண்டிருப்பு தினகரன் நிருபர்