123
ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு 19வது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் (26) உணர்வு பூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. டச்பார் போன்ற கரையோரப் பிரதேசங்களிலுள்ள சுனாமி நினைவுத் தூபியில் கண்ணீர்மல்க கதறியழுது உறவினர்கள் மலரஞ்சலி செலுத்தினர். டச்பார் பங்குத் தந்தை அருட்தந்தை எம்.லோரன்ஸ் அடிகளார் தலைமையில் விசேட ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. மடகஸ்கார், இந்தோனேசியா, செனகல், மெக்சிகோ ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு குறூப் நிருபர் நிருபர்