விண்ணப்பங்கள் ஏற்பு இன்றுடன் நிறைவு
உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் வழங்கும் புலமைப்பரிசில்கள் தொடர்பான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (22) நிறைவடைகிறது.
இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய,கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
நாட்டின் நூறு கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, 5,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.
2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முதல் முறையாகத்தோன்றி, பரீட்சையில் சித்தி பெற்று, உயர்தரம் கற்கத் தகுதிபெற்று, அரச பாடசாலையிலோ அல்லது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையிலோ கல்வி பயிலும், விண்ணப்பதாரரின் குடும்பத்தின், மாத வருமானம் ரூ. 1,00,000 வுக்கு குறைவாக இருந்தால், இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளங்கள்: presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம்: presidentsfund.gov.lk மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு: pmd.gov.lk ஆகியவற்றிற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்த பின், குறித்த மாணவர்கள், 2023 டிசம்பர் 22-ஆம் திகதிக்கு முன், தாங்கள் பரீட்சை எழுதிய பாடசலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.