191
போதைப்பொருள் கடத்தல், பாவனைக்கு எதிரான பாரிய ‘யுக்திய’ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மன்னாரில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் சட்டவிரோத போதை மாத்திரைக ளும் இதன்போது கைப்பற்றப்பட்டன . சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 18,000 போதை மாத்திரைகளின் பெறுமதி 2.1 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இச்சோதனை நடவடிக்கைகள் தொடருமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.