புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களைச் செயற்படுத்துதல், தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை நிறுவுதல், 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மின்சாரத் தொழிற்துறையை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நிறுவனச் சட்டத்தின் கீழ் பெருநிறுவனங்களை இணைப்பதற்குப் பொருந்தக்கூடிய சட்டமியற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அத்துடன், மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், வழங்கல், கொள்முதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளுக்கும் பொருந்தக்கூடிய செயல்முறைகளை முன்னெடுத்தல் ஆகியனவும் இதில் அடங்கும்.
1969 ஆம் ஆண்டு இலக்கம் 17 ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட மின்சார சபை மற்றும் மின்சாரத் துறை தொடர்பான மறுசீரமைப்பு மற்றும் முன்மொழிவுகள் இதில் உள்ளடங்குகின்றன.
இதனைத் தொடர்ந்து குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Electricity-Bill-Gazette-419-2023_E