வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான யந்திரபூஜை ஆரம்பமும், பந்தற்கால் நாட்டும் நிகழ்வு இன்று (07) பக்திபூர்வமாக இடம்பெற்றன..
இவ்வாலயத்தில் யந்திர பூஜை, பந்தற்கால் நடும் கிரியைகள் இன்று இடம்பெற்று 48 நாட்கள் மண்டாபிலேஷ கிரியைகள் இடம்பெற்று எதிர்வரும் 22.01.2024 அன்றும், மறுநாள் 23.01.2024 வரை நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் எண்ணைக்காப்பு சாத்தும் தைத்திரு நாளுக்கான சமயநிகழ்வும் இடம்பெற்று 24.01.2024 அன்று மஹாகும்பாபிஷேக பெரும்விழா இடம்பெறவிருக்கின்றன.
இதில் அம்பிகைக்கான கார்த்திகை திங்கள் இன்று 21 ஆம் நாளில் விஷேட கிரியைகள் இடம்பெற்று கும்பாபிஷேக கோமங்கள் ஆலய பிரதம குரு சிவாச்சாரியரியினர்கள், ஏனைய சிவாச்சாரிகளால் நடாத்திவைக்கப்பட்டன.
இனிதே கும்பாபிஷேக பெருவிழாவிற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டலுக்கான கர்மாகிரியைகள் இடம்பெற்றன.
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய அறங்காவலர்கள் மற்றும் மகாசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கோப்பாய் குறூப் நிருபர்