247
மட்டக்களப்பு ரட்ணம் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட நடா வெற்றிக் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் பேட்டியில் ஏறாவூர் இளந்தாரகை அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. மட்டக்களப்பு மாமாங்க விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலைக்குடா விநாயகர் அணியை இளந்தாரகை அணி 3–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
இதன்போது ஆட்டத்தில் முதல் பாதியில் இரண்டு கோல்களை பெற்ற இளந்தாரகை வீரர்கள் இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோலை புகுத்தி ஆதிக்கம் செலுத்தினர்.
ஏறாவூர் சுழற்சி நிருபர்