கொட்டாவை – அத்துருகிரிய அதிவேக வீதியின் 3 ஆவது மைல் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
எம்பிலிபிட்டிய, செவனகல, பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ரணசிங்க ஜயசுந்தர சுதர்மா என்ற பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த பெண் தனது வீட்டிற்கு செல்வதற்காக கடுவெல அதிவேக நெடுஞ்சாலையின் எம்பிலிப்பிட்டிய பகுதியில் வைத்து விபத்திற்குள்ளான லொறியில் ஏறியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
குறித்த விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளதுடன், பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கடுவெலயிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த லொறி, அத்துருகிரிய 3 ஆவது மைல் பகுதியில் மாத்தறை நோக்கிப் பயணித்த மற்றுமொரு லொறியின் டயர் வெடித்ததால் டயரை மாற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது அந்த லொறியுடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.