இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று (15) மட்டக்களப்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதோடு, அவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் வருகை தந்திருந்தார்.
இதன்போது அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பு சரவணா வீதியில் அமெரிக்க அரசினால் நிறுவப்பட்டுள்ள அமெரிக்கன் ஹப் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தையும் திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் American ihub திறந்து வைப்பு!
மட்டக்களப்பு, கல்லடியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் American ihub இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையமானது மாணவர்கள், உயர் தர கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கற்கையில் திறனை வளர்த்துக்கொள்ளல், ஆங்கில அறிவினை மேம்படுத்தல், விசேடமாக இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்குதல் போன்ற பல்வேறு அபிவிருத்திகளை மையப்படுத்தி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமெரிக்க தூதரக பிரதானிகள்,கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R.M.P.S. ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் L.P. மதநாயக்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.