அம்பாறை மாவட்ட சதுரங்க போட்டியில் தொடர்ந்து 3ஆவது வருடமாக சம்பியன் பட்டத்தை வென்ற பளில் பாத்திமா இல்மா தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சதுரங்க சம்பியன்சிப் போட்டிகள் அம்பாறை டி.எஸ் சேனநாயக்கா தேசிய பாடசாலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில் கல்முனை அல்–மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவி பாத்திமா இல்மா 13 வயது பெண்கள் பிரிவு சதுரங்க அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடர்ச்சியாக 3 ஆவது வருடமாக அம்பாறை மாவட்ட சம்பியன் எனும் பட்டத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்மாணவி கல்முனையைச் சேர்ந்த எம்.பளில், ஆசிரியை எஸ்.எல்.எஸ்.மர்ஜூனாவின் புதல்வியாவார்.
கல்முனை மத்திய, ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்