278
நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (6) மாலை 3.00 மணி முதல் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. மேலும் கனமழை காரணமாக நீர்கொழும்பு, சிலாபம் பிரதான வீதியில் பெரியமுல்ல பிரதேசத்தில் பழைய கட்டடமொன்றும் இடிந்து விழுந்தது. சன நெரிசல் மிகுந்த குறித்த பிரதேசத்தில் பொதுமக்களுக்கு எதுவிதமான உயிர் ஆபத்துகளும் இதனால் ஏற்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு தினகரன் நிருபர்