இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு நான்கரை வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ளது. திருகோணமலையில் எதிர்வரும் ஜனவரி 28இல், இம்மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இதனை முன்னிட்டு கட்சியின் தலைவர் உட்பட புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம் ஜனவரி 21இல், கூடவுள்ளதாகவும் தெரிய வருகிறது.இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் (05) வவுனியாவில் நடந்த கூட்டத்தில் இதுபற்றி தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திருமலையில் நடைபெறும்போது, தலைவர் உட்பட புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். வவுனியாவில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று (05.11.2023) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 20 இல், நடைபெறும்போது கட்சித் தலைவர் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நியமனங்கள் பற்றி ஆராயப்படும். இதில், தேர்தலின்றி, இணக்கமான தீர்வுகளை ஏற்படுத்த முயற்சிகள் மற்றும் பேச்சுக்களும் இடம்பெறவுள்ளன. இருந்தபோதும், மறுநாள் 21 ஆம் திகதி கட்சியின் பொதுக்குழு திருகோணமலையில் கூடி, புதிய நிர்வாகிகள் தெரிவு மற்றும் முக்கிய தீர்மானங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இணக்கப்பாடுகள் எட்டப்படாவிடின்,தேர்தல் மூலம் தெரிவுகள் இடம்பறெவுள்ளன. இதன் பின்னர் ஜனவரி 27இல், கட்சியின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி மாநாடுகள் திருகோணமலையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.