Thursday, May 2, 2024
Home » ரயில் மோதி பெண் உயிரிழப்பு

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

தண்டவாளத்தில் பயணிக்கையில் சம்பவம்

by damith
November 6, 2023 10:57 am 0 comment

புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் ஒருவர் புகையிரதம் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது (03) உயிரிழந்துள்ளார்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் பாமஸ்டன் – கிரேட்வெஸ்றன் பகுதியில் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தின் நடந்து சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

புகையிரதத்தில் மோதி உயிரிழந்தவர் நானுஓயா உடரதல்ல தோட்டத்தை சேர்ந்த சண்முகம் சந்திரமதி (வயது-40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT