268
புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் ஒருவர் புகையிரதம் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது (03) உயிரிழந்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் பாமஸ்டன் – கிரேட்வெஸ்றன் பகுதியில் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தின் நடந்து சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
புகையிரதத்தில் மோதி உயிரிழந்தவர் நானுஓயா உடரதல்ல தோட்டத்தை சேர்ந்த சண்முகம் சந்திரமதி (வயது-40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற்றுள்ளது.