இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஐயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் நேற்று (03) வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த
போதே, அவர் நல்லூர் கோயிலுக்கு சென்றதுடன், விசேட பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார். இதன் பின்னர், கோயிலுக்கு வெளியில் கூடியிருந்த சிறுவர்களுடன் அவர் கலந்துரையாடி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். அவரது இந்த விஜயத்தின் போது இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ். மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.