168
முச்சக்கரவண்டியொன்றில் தவறவிடப்பட்ட 92,000 ரூபா பணத்துடனான கைப் பையைக் கண்டெடுத்து பெண்ணொருவர் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று, அநுராதபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.
பணப்பையைக் கண்டெடுத்த பெண், அதனை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் கையளித்துள்ளார். பொலிஸார் பணப்பையின் உரிமையாளரைக் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர். பொருளாதார நெருக்கடியான இந்நேரத்தில் இவ்வாறான ஒரு நல்ல செயலை செய்தமைக்காக பெண்ணுக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.