இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து
செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டணத்திற்குட்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மற்றும் பெருமளவு நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் கீழ் மேற்படி மனு நிராகரிக்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரிட்டன் குடியுரிமையைக் கொண்டவர் என்பதால், இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தல் மற்றும் வாக்களித்தல் என்பவற்றுக்கு தகைமையில்லாதவர் என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்