Sunday, April 28, 2024
Home » கைதான இந்திய மீனவர்களுக்கு நவம்பர் 08 வரை விளக்கமறியல்

கைதான இந்திய மீனவர்களுக்கு நவம்பர் 08 வரை விளக்கமறியல்

by Rizwan Segu Mohideen
October 27, 2023 1:28 pm 0 comment

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12பேரின் விளக்கமறியலை நவம்பர் 08 ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.

நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மூன்று படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் ஒக்டோபர் 15ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டபோது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை
நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது 12 மீனவர்களின் விளக்கமறியலையும் நவம்பர் 08ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT