இலங்கையின் 16ஆவது இராணுவத் தளபதியான ஜெனரல் லயனல் பலகல்ல காலமானார்.
சுகயீனம் காரணமாக கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 75ஆவது வயதில் இன்று (26) காலை காலமானார்.
இலங்கை இராணுவத்தின் பீரங்கி படையின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான ஜெனரல் எல்.பி. பலகல்ல 2000 முதல் 2004ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இராணுவத்தின் 16வது தளபதியாக கடமையாற்றிய அதேசமயம், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாகவும் சேவையாற்றினார்.
அவரது பூதவுடல் தற்போது இல. 21/12 சமனல வீதி, கொத்தலாவல, கடுவெல என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிக்கிரியை இராணுவ மரியாதையுடன் எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
ஸாதிக் ஷிஹான்