மீன்பிடி தொழிலையே தனது ஜீவனோபாயமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மீனவர் ஒருவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட நிகழ்வொன்று அ/ நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம் பெற்றது.
அண்மையில் வெளியான க. பொ.த.( உயர்தர ) பெறுபேறுகளின் பிரகாரம் தனது கடைசி மகள் 03 ஏ சித்திகளைப் பெற்று இப் பாடசாலைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார். தனது முதலாவது மகள் ஒரு பல்கலை கழக பட்டதாரியும், இரண்டாவது மகள் பல்கலைக்கழக பட்டதாரியும் தனது மூன்றாவது மகளையும் பல்கலை கழக தகுதி பெற்ற மாணவியாக உருவாக்கி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மேற்படி மீனவ தந்தை நாச்சியாதீவு எம்.எஸ்.எம். பாரூக் என்பவரேயாவர். பாடசாலையில் அண்மையில் நடந்த, பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவித்த நிகழ் வொன்றின்போது பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்களால் அவர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
திறப்பனை தினகரன் நிருபர்