192
பெரும்போகத்திற்கான யூரியா உரம் இன்று முதல் (10) விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்திற்கு தேவையான 21 ஆயிரம் மெட்ரிக்தொன் யூரியா உரமே, இன்று முதல் விநியோகிக்கப்பட வுள்ளது. லங்கா உர நிறுவனமும் கொழும்பு வர்த்தக உர நிறுவனமும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 50 கிலோ யூரியா மூடையொன்று ஒன்பதாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நெல் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவை உரம் கொள்வனவுக்காக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்