Monday, April 29, 2024
Home » காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் இரு தினங்கள் பூட்டு

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் இரு தினங்கள் பூட்டு

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளம்

by damith
October 9, 2023 6:38 am 0 comment

மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் குறிப்பிட்ட இரு மாவட்டங்களிலுமுள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று 9ம் திகதி திங்கட்கிழமையும், நாளை 10ம் திகதி செவ்வாய்க்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. மாத்தறை மாவட்டப் பாடசாலைகள் கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளிலும் மூடப்பட்டிருந்தது. தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே தலைமையில் தென் மாகாண அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், மற்றும் கல்வி அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாரம் நடைபெறவிருந்த 2ம் தவணைப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன.

தெலிஜ்ஜவில பகுதியில ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் ஒரு வீடு முற்றாக நீரில் மூழ்கியிருப்பதையும் படத்தில் காணலாம்.

வெலிகம தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT