Home » முல்லைத்தீவில் ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

முல்லைத்தீவில் ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

- 486 கொக்கேன் போதை மாத்திரைகளும் மீட்பு

by Prashahini
October 9, 2023 3:54 pm 0 comment

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இருந்த இளைஞர் ஒருவரே நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும் , இவரிடம் இருந்து 486 கொக்கேன் போதை மாத்திரைகளும், 34 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓமந்தை விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT