Sunday, April 28, 2024
Home » போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

- சட்டவிரோதமான முறையில் 200 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்பு

by Prashahini
October 6, 2023 4:14 pm 0 comment

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதைமாத்திரைகளை வைத்திருந்த பெண் சந்தேக நபர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையின் அநுராதபுரம் முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அநுராதபுரம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (05) பகல் ஹிதோகம பொலிஸ் பிரிவின் நாச்சியாதுவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது பெண் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 200 க்கும் அதிகமான போதை மாத்திரைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் 46 வயதுடய உலப்பனை பகுதியை வசிப்பிடமாக கொண்ட பெண் ஒருவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT